Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாடலாசிரியருக்கு பிறந்தநாள்.. சசிக்குமார் கொடுத்த பரிச பாத்தீங்களா? வைரலாகும் ட்வீ ட்!
சென்னை: எம்ஜிஆர் மகன் படத்தில் பாடல் எழுதிய பாடலாசிரியருக்கு நடிகர் சசிக்குமார் பிறந்த நாள் பரிசு வழங்கியுள்ளார்.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் சசிக்குமார். அனைவருடனும் எளிமையாக பழக கூடிய நபரும் ஆவார்.
பார்த்து முள் குத்திடப் போகுது.. பூக்களால் முன்னழகை மறைத்த பிரபல நடிகை.. பதறிப் போன ரசிகர்கள்!
கடைசியாக அவரது நடிப்பில் நாடோடிகள் 2 படம் ரிலீஸ் ஆனது. தற்போது ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஏப்ரலில் ரிலீஸ்
இதில் எம்ஜிஆர் மகன் படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
பெரும் வரவேற்பு
இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
எனக்கு பிடித்த பாடல்
இதில் அந்தோணிதாசன் மற்றும் பூஜா வைத்யநாத் பாடியுள்ள, "ஏறெடுத்து பாக்காம, என்னண்ணுதான் கேக்காம" பாடலை பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். இந்த பாடலை "எனக்குப் பிடித்த பாடல்" என்று சசிகுமார் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் பரிசு
இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், சசிக்குமாரின் வாழ்த்தும் பாராட்டும் இந்தப் பிறந்தநாளில் தனக்கு கிடைத்த பெரிய பரிசாக நினைப்பதாக கூறியுள்ளார்.