திலீபனின் நினைவிடத்தில் நடிகர் சதீஷ்
நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்
சென்னை: நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சதீஷ் தற்போது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் வெளியான தமிழ்ப்படம் 2 திரைப்படத்தில் ஹாலிவுட், கோலிவுட் என பல வில்லன்களின் கெட்டப் போட்டு கலக்கியிருந்தார்.

அடுத்ததாக, அதர்வாவுடன் பூமரங், ஜிவி.பிரகாஷின் 4ஜி, 100% காதல் சிவகார்த்திகேயன் படம் என பல படங்களில் பிசியாக உள்ளார்.
சமீபத்தில் இலங்கை சென்ற சதீஷ், யாழ்பாணத்தில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நேற்று திலீபனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பார்த்திபன் ராசையா எனும் இயற்பெயர் கொண்ட திலீபன் இலங்கையில் பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உண்ணாவிரதத்தை துவங்கிய திலீபன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் செப்டம்பர் 26 ஆம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார். 23 வயதில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் நினைவுநாள் தமிழ் உணர்வாளர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டது.
திலீபனின் நினைவு நாளான நேற்று சதீஷ் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்கு பலரும் உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











