Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திலீபனின் நினைவிடத்தில் நடிகர் சதீஷ்
நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்
சென்னை: நடிகர் சதீஷ் திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சதீஷ் தற்போது தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் வெளியான தமிழ்ப்படம் 2 திரைப்படத்தில் ஹாலிவுட், கோலிவுட் என பல வில்லன்களின் கெட்டப் போட்டு கலக்கியிருந்தார்.
அடுத்ததாக, அதர்வாவுடன் பூமரங், ஜிவி.பிரகாஷின் 4ஜி, 100% காதல் சிவகார்த்திகேயன் படம் என பல படங்களில் பிசியாக உள்ளார்.
சமீபத்தில் இலங்கை சென்ற சதீஷ், யாழ்பாணத்தில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நம் சகோதரர்களுக்காக திரு.திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த இடம். 🙏🏻🙏🏻🙏🏻#யாழ்ப்பாணம் pic.twitter.com/nwrJ1N4Mma
— Sathish (@actorsathish) September 26, 2018
நேற்று திலீபனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பார்த்திபன் ராசையா எனும் இயற்பெயர் கொண்ட திலீபன் இலங்கையில் பயங்கரவாத தடைசட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உண்ணாவிரதத்தை துவங்கிய திலீபன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் செப்டம்பர் 26 ஆம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார். 23 வயதில் உயிர்த்தியாகம் செய்த திலீபனின் நினைவுநாள் தமிழ் உணர்வாளர்களால் நேற்று அனுசரிக்கப்பட்டது.
திலீபனின் நினைவு நாளான நேற்று சதீஷ் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்கு பலரும் உணர்வுப்பூர்வமாக நன்றி தெரிவித்து வருகின்றனர்.