Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா.. குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இன்று வரை செந்தில் - கவுண்டமணி காம்போவுக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் இருவரும்.
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார். அதிமுகவில் இருந்த நடிகர் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.
கொரோனா உறுதி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
குடும்பத்துடன் சிகிச்சை
நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் செந்தில் தனது குடும்பத்தினருடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் நிலையில் முன்னேற்றம்
இந்நிலையில், அவரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து மூன்று நாட்களில் நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைத்துறை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.