Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இதுல கொண்டு போறீங்களே.. கடைசியாக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சேதுவின் உடல்.. கதறிய உறவினர்!
சென்னை: நடிகர் சேதுரமானின் உடல் இறுதியாக ஆம்புலன்ஸில் ஏற்றிச்செல்லப்பட்டதை பார்த்து அவரது உறவினர் கதறியது கலங்கச் செய்தது.
Recommended Video
இளம் நடிகரான சேதுராமன் கடந்த 26ஆம் தேதி இரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு பெண் குழந்தை
தோல் சிகிச்சை நிபுணரான சேதுராமன் சென்னை அண்ணா நகரில் ஸ்கின் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். சேதுராமன் 2016ஆம் ஆண்டு உமையாள் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
பலரும் வேதனை
திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு சேது அகால மரணமடைந்தது பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவரது இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போனது.
ஆம்புலன்ஸில் ஏற்றியபோது
இதனை தொடர்ந்து 27 ஆம் தேதி பகல் சேதுராமனின் வீட்டிலேயே அவருக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியபோது அவரது மனைவியும் தயாராரும் கதறி அழுதனர்.
என்னடா இந்த வண்டில..
அவரது மனைவி சேதுவின் முகத்தை அணைத்து முத்தமிட்டார். அவரது தாயும் சேது சேது என கதறினார். அவரது உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டதை பார்த்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், என்னடா இந்த வண்டில கொண்டு போறீங்க.. அவனுக்கு பென்ஸ் காரும் ஆடி காரும் தானே பிடிக்கும் என்று கதறினார்.
கலங்க வைத்த கதறல்
சேதுராமனின் இறுதிச்சடங்கு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவரது குடும்பத்தினரின் இந்த கதறல் கலங்கச் செய்துள்ளது. சேதுராமனின் உடலை அவரது நெருங்கிய நண்பரான சந்தானம் கண்ணீருடன் சுமந்து சென்றார். இதனை தொடர்ந்து நடிகர் சேதுராமனின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.