Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜனநாதனின் ‘புறம்போக்கு’: ஆர்யா–விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்
சென்னை: ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'புரம்போக்கு' படத்தில் புதிய வரவாக நடிகர் ஷாம்-ம் சேர்ந்துள்ளாராம்.
யுடிவி நிறுவனம் தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் டைரக்டு செய்யும் படம் 'புறம்போக்கு'. இப்படத்தில் முதன்முறையாக ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கிறார்கள்.
இந்நிலையில் புதிதாக அந்த படத்தில், ஆர்யா-விஜய் சேதுபதியுடன் ஷாம் இணைகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாதன் படம்...
பொதுவாக ஜனநாதன் படம் என்றாலே சமூகத்திற்கு ஏதாவது கருத்துச் சொல்லும் படமாகத் தான் இருக்கும். இதற்கு உதாரணமாக அவரது முந்தைய படங்களான ஈ, பேராண்மை போன்றப் படங்களைச் சொல்லலாம்.
சமூகப்படம்...
அந்தவகையில், தற்போது இயக்கி வரும் புறம்போக்கு படமும் சமூக சீர்கேடுகளை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை தானாம். அவருக்கு உறுதுணையாக இருக்கிறார், இன்னொரு இளைஞர். இவர்கள் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இது தான் படத்தின் கதையாம்.
போலீஸ் அதிகாரியாக ஷாம்....
படத்தில் வரும் இரண்டு இளைஞர்களாக ஆர்யா மற்றும் விஜய் சேதுபதி நடிக்க, அந்த மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ஷாம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தில்லாலங்கடி...
ஏற்கனவே, தில்லாலங்கடி படத்தில் ஜெயம் ரவியைத் தேடி அலையும் மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்தில் ஷாம் நடித்திருந்தார்.
நாயகியாக கார்த்திகா...
இப்படத்தின் கதாநாயகியாக கார்த்திகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஷாம் என மூன்று நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில், கார்த்திகாவை தவிர வேறு கதாநாயகிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்புத் துவக்கம்...
ஜனவரி 14-ந் தேதி பொங்கல் அன்று குலுமனாலியில் படப்பிடிப்புத் தொடங்குகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், எஸ்.பி.ஜனநாதன்.
க்ளைமாக்ஸ் சென்னையில்...
தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பிகானீர், பொக்ரான், ஜெய்சல்மீர் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்