நான் சோர்ந்த போதெல்லாம் என்னை அரவணைத்தார்… எஸ்.பி.ஜனநாதனின் பிறந்த நாளில் ஷாம் உருக்கம் !
சென்னை : மறைந்த எஸ்பி ஜனநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஷாம் அவரை பற்றி நினைவு கூர்ந்தார்.
இயற்கை, பேராண்மை, ஈ , பொறம்போக்கு எனும் பொதுவுடைமை என பல படங்களை இயக்கியவர் எஸ்.பி ஜனநாதன்.
முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

கம்யூனிச சித்தாந்தங்கள்
சமூக சமநிலை, அத்தியாவசியம், அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம், கம்யூனிச சித்தாங்களைத் தன்னுடைய படங்களில் பேசியவர் ஜனநாதன். இவர், கடந்த மார்ச் மாதம் 14ந் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் பிறந்த நாளான இன்று அவரின் நினைவுகளை ஷாம் நினைவு கூர்ந்தார்.

முடியாமல் போனது
எஸ்.பி. ஜனநாதனுக்கும் எனக்கும் எப்போது ஒரு பிணைப்பு உண்டு, நான் சோர்ந்த போதெல்லாம் கேப்டனை சந்தித்து பேசுவேன். அப்போது அவர் உங்கள் நேரம் வரும் ஷாம், நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று கூறுவார். படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்தால் தன் சம்பளத்தைக் குறைக்க முன்வருவார்.

நம்பிக்கை ஊட்டுவார்
எஸ்.பி. ஜனநாதனுக்கும் எனக்கும் எப்போது ஒரு பிணைப்பு உண்டு, நான் சோர்ந்து போதெல்லாம் கேப்டனை சந்தித்தேன் பேசுவேன். அப்போது அவர் உங்கள் நேரம் வரும் ஷாம், நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று கூறுவார். படத்தின் தயாரிப்பு செலவு அதிகரித்தால் தன் சம்பளத்தைக் குறைக்க முன்வருவார்.

ஆறுதலாக உள்ளது
எஸ்.பி. ஜனநாதனின் பொறம்போக்கு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தேன். நான், ஆர்யா, விஜய்சேதுபதி அவருடன் இணைந்து பணியாற்றியது மறைக்க முடியாத ஒன்றாக உள்ளது. அவருடைய பிறந்த நாளில் அவரைப்பற்றி பேசுவது சற்று ஆறுதலாக இருக்கிறது என்று ஷாம் கூறினார்.


Click it and Unblock the Notifications











