Don't Miss!
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
படப்பிடிப்பு தளத்தில் அடிதடி தள்ளுமுள்ளு… நடிகர் மீது புகார் !
கொச்சி : டோவினோ தாமஸ் நடித்து வரும் "தள்ளுமாலா" படப்பிடிப்பின் போது பொதுமக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது.
மின்னல் முரளி படத்தில் சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டிஇருந்த டோவினோ தாமஸ் இயக்குனர் காலிக் ரஹ்மான் இயக்கத்தில் தள்ளுமாலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் டோவினோவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்து வருகிறார்.
தள்ளுமாலா படத்தின் திரைக்கதையை எழுத்தாளர்கள் முஹ்சின் பராரி மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் எழுதியுள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைக்க, அனுராகா கரிக்கின் வெல்லம், கப்பேலா, லவ் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.
தள்ளுமாலா திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியை அடுத்த களமச்சேரியில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், படப்பிடிப்பு நடைபெற்றதால், சாப்பாட்டு தட்டு, டீ கிளாஸ் போன்றவை அந்த பகுதியில் அதிகம் வீசப்பட்டு இருந்தன.
இதனால் ,படப்பிடிப்பு தளத்தை சுற்றி குப்பைமேடாக காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தை முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடைசியில் கைகலப்பாகி விட்டது. அப்போது நடிகர் ஷான் டோம் சாக்கோ ஒருவரை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவர்களிடம் சமரசமாக பேசி கூட்டத்தைகளைத்தனர்.