Don't Miss!
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- News இது டூ மச்.. விஜய் யாருக்கு ஓட்டுப் போடுகிறார் என்று போட்டோ எடுத்த போலீஸ்காரர்! நடவடிக்கை பாயுமா?
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
என்னா அதிகாரம்.. அர்ச்சனா போட்டியாளரா.. இல்ல பிக்பாஸா.. கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சில ஹவுஸ்மேட்ஸ்களின் அலப்பறையை பார்த்த பிரபல நடிகர் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த சீசன் முதலே பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருபவர் நடிகர் சிவகுமார்.
கடந்த சீசனல் இவர் கணித்ததை போன்றே முகேன் டைட்டில் வின்னரானார். இந்நிலையில் இந்த சீசனையும் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் சிவகுமார் தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
குரூப்பிசம் தான் பச்சையா தெரியுதே.. ரொம்ப நாள் நடிக்க முடியாது.. ரியோவை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
சாதாரண ஆல் இல்லை
அந்த வகையில் கடந்த வாரம், விஜே அர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்தியை மொட்டை என்று கூறியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார் சிவகுமார். சுரேஷ் சக்கரவர்த்தி ஒன்றும் சாதாரண ஆள் இல்லை என்று அவர் குறித்த பல முக்கிய தகவல்களை கூறினார்.
கடுப்பான சிவகுமார்
மேலும் அர்ச்சனா தன்னுடைய பழைய நாட்களை மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில், சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தியை மரியாதை குறைவாகவும் தரக்குறைவாகவும் பேசியதை பார்த்து கடுப்பாகியுள்ளார் சிவகுமார்.
ஏன் மன்னிப்பு கேட்கவில்லை
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நான் இறுதியாக சனத்தை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் !! இந்த சாதாரண விஷயத்தால் அவர் கண்ணை இழந்திருக்கலாம்! சுரேஷ் சார் மன்னிப்புக் கேட்டபின், அவரை மரியாதை குறைவான வார்த்தைகளால் பேசியதற்கு சனம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது. அவர் பேசிய வார்த்தைகளை கூட அவர் உணரவில்லை என பதிவிட்டுள்ளார்.
போட்டியாளரா? பிக்பாஸா?
தன்னுடைய மற்றொரு பதிவில் விளையாட்டு வினை ஆகும்.. என்னை மக்கள் ஒருசார்பாக இருப்பதாக கூறுவதை பற்றி நான் பொருட்படுத்தவில்லை! நான் அப்படி இல்லை! சுரேஷ் சார் அனைவரையும் அடித்தது தவறு! ஆனால் பெரியவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், அவர் ஒரு பெரிய தவறு செய்ததாக உண்மையிலேயே உணர்ந்தார்! ஆனால் எனக்கு புரியவில்லை அர்ச்சனா போட்டியாளரா அல்லது பிக்பாஸா என பதிவிட்டுள்ளார்.