Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் சிவக்குமாரின் பேச்சு! - கோபத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ரசிகர்கள்
சென்னை : மார்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார், தற்போது நடிப்பதை தவிர்த்து வந்தாலும், மகாபாரதம், கம்பராமாயணம் உள்ளிட்ட புராணங்கள் குறித்து அவ்வபோது கல்லூரிகளில் பேசி பாராட்டு பெற்று வருவதோடு, மாணவர்களுக்கு உடல் நலத்தை காப்பது குறித்து விழுப்புணர்வும் ஏற்படுத்துகிறார்.
உடற்பயிற்சி, யோகா பயிற்சி போன்றவைகள் மூலம் 80 வயதை கடந்த பிறகும் ஆக்டிவாக இருக்கும் சிவக்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரது செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். தற்போது இந்த பிரச்சினை குறித்து மக்கள் மறந்துவிட்டாலும், சில திரைப்படங்களில் காமெடிக்காக இந்த சம்பவத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஹீரோவாக நடிக்கும் போது எந்தவிதமான சர்ச்சையிலும் சிக்காத சிவக்குமார், நடிக்காமல் இருக்கும் போது இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியது, அவர்களது மகன்களான நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு பெரும் வருத்தத்தை கொடுத்த நிலையில், தற்போது புதிய சர்ச்சையில் நடிகர் சிவக்குமார் சிக்கியுள்ளார்.
சென்னையில், நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட சிவக்குமார், நம்பியாருடன் இணைந்து நடித்த தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அப்போது ஒரு படத்தில் நம்பியாரின் நடையை பார்த்து தான் பிரமித்து போனதாக தெரிவித்த சிவக்குமார், அந்த ராஜ நடையை சிவாஜியால் கூட நடக்க முடியாது. பொதுவாக கம்பீரமான நடைக்கு சிவாஜியை தான் உதாரணமாக சொல்வார்கள். ஆனால், நம்பியாரின் நடைக்கு முன்னாள் சிவாஜியின் நடை சாதாரணமானது. அப்படி ஒரு ராஜநடை நடப்பார், என்று கூறினார்.
நம்பியாரின் நூற்றாண்டு விழாவில் சிவாஜி ரசிகர்களும் பலர் கலந்துக் கொண்டனர். குறிப்பாக சிவாஜி குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் இயக்குநர் பி.வாசு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர்களுக்கெல்லாம் சிவக்குமாரின் பேச்சு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்பியார் போல வில்லன் வேடத்தை யாராலும் கையாள முடியாது, என்று சிவக்குமார் கூறியிருக்கலாம், ஏன், நம்பியாரின் நடை கம்பீரமாக இருக்கும், என்று கூட அவர் கூறியிருக்கலாம், அதை விட்டுவிட்டு, சிவாஜியால் கூட அப்படி நடக்க முடியாது, என்று எதற்காக கூற வேண்டும், எதற்கு சிவாஜியை இழுக்க வேண்டும், என்று சிவாஜி ரசிகர்கள் நடிகர் சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!