5 முறை ஹேக் செய்யப்பட்டது.. என் டிவிட்டுகள் மறைக்கப்படுகின்றன.. பிரபல நடிகர் டிவிட்டர் மீது புகார்!
சென்னை: தன்னுடைய டிவிட்டர் கணக்கு 5 முறை ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக பிரபல நடிகர் டிவிட்டர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உட்பட மற்ற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த்.

மத்திய அரசை சாடி
தொடர்ந்து அரசுக்கு எதிராக மக்கள் பிரச்னைகள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசை சாடியும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

5 முறை ஹேக்
இந்நிலையில் தனது பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் மறைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் சித்தார்த். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இதுவரை 5 முறை தனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தானாக அன்ஃபாலோ
மேலும் தன்னுடைய டிவிட்டுகள் தடைசெய்யப்பட்டு மறைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய ஃபாலோயர்ஸ் தான் பதிவிடும் டிவிட்டுகளை காண முடியவில்லை என்றும் அவர்கள் தானாக அன்ஃபாலோ செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

நிச்சயமாக முடக்கப்பட்டுள்ளது
மேலும் கடந்த 16 மாதங்களாக தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாறவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள சித்தார்த், ஏதோ நிச்சயமாக முடக்கப்பட்டுள்ளது என்றும் சாடியுள்ளார். என்ன நடக்கிறது டிவிட்டர் இந்தியா என்று TwitterIndia ஹேண்டிலையும் குறிப்பிட்டு டேக் செய்துள்ளார் சித்தார்த்.


Click it and Unblock the Notifications











