Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார்: கேரள முதல்வரை பாராட்டும் சித்தார்த்
கேரள முதல்வரை நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார்
சென்னை: கேரள முதல்வர் பினரயி விஜயனை நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார்.
வரலாறு காணாத வகையில் கொட்டித் தீர்த்த மழையால் கேரளாவில் 13 மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. ரூ. 19, 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்திருப்பதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரள வெள்ளபாதிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள நடிகர் சித்தார்த், சுயநலமில்லாமல் கருணையாக பணியாற்றுவது மன நிறைவைத் தருகிறது. மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக கேரள முதல்வர் பினரயி விஜயன் திகழ்கிறார். எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிகள் அரசாங்கம் என அனைவருமே தங்களின் ஒற்றுமையை பறைசாற்றியுள்ளனர் எனக் கூறியுள்ளார்.
The stories of kindness, sincerity and selflessness beyond duty coming out of #Kerala are the stuff of legend. Special mention to @CMOKerala for setting a great example. Politicians in government and the opposition have shown great unity. Thank you from the rest of us!
— Siddharth (@Actor_Siddharth) August 20, 2018
அதேபோல், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர், அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பையும் பாராட்டியுள்ள சித்தார்த், மீதமுள்ள இந்தியா இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
The #fishermen the #ArmedForces local and national NGOs and most importantly the common people of Kerala have shown the world the power of human kindness and courage in the face of such devastation. The rest of India would do well to watch and take inspiration. Be strong #Kerala
— Siddharth (@Actor_Siddharth) August 20, 2018
சித்தார்த் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 10 லட்சம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.