Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சர்ச்சையான 'நாகூர் பிரியாணி' சித்தார்த் கொடுத்த "சிறப்பான" விளக்கம்!
சென்னை: சமீபத்தில் தான் பதிவு செய்த சர்ச்சையான ட்வீட்டிற்கு என்னுடைய படத்தின் வசனத்தை தான் நான் பதிவிட்டேன் யாரையும் குறிப்பிடவில்லை என்று நடிகர் சித்தார்த் விளக்கமளித்திருக்கிறார்.
சித்தார்த் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படம் குறித்து நடிகர் சித்தார்த் பேசினார்.
இந்த விழாவில் நடிகர் சித்தார்த் சமீபத்தில் பதிவிட்ட "நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டைல இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ணு எழுதி இருந்தா அத யாராலயும் மாத்தமுடியாது".
என்ற பதிவிற்கு பத்திரிக்கையாளர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் வரும் வசனம் அது. நான் யாரையும் குறிப்பிட்டு டுவிட் செய்யவில்லை.
@ #JillJungJuk Press Meet @Actor_Siddharth pic.twitter.com/vsfpijm4If
— Nikkil Murugan (@onlynikil) February 3, 2016
எனது ட்விட்டர் பக்கத்தில் நான் நடித்த படத்தின் வசனத்தை எழுதினேன். மற்றவர்கள் வேறு விதத்தில் நினைத்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும்' என சித்தார்த் விளக்கமளித்தார்.
இந்த ட்வீட் வெளியான சமயம் முன்னணி நடிகர்களைத் தான் அவர் குறிப்பிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் அதனைப் பற்றி காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பின் சித்தார்த் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இவரது நடிப்பில் நாயகிகளே இல்லாமல் உருவாகியிருக்கும் ஜில் ஜங் ஜக் திரைப்படம் வருகின்ற 12 ம் தேதி வெளியாகிறது.