Don't Miss!
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கோவா பீச்சில் பிணமாகக் கிடந்த வாரிசு நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி
Recommended Video
திருவனந்தபுரம்: பிரபல மலையாள பட தயாரிப்பாளரின் மகனும், நடிகருமான சித்து ஆர். பிள்ளை கோவா கடற்கரையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள பட தயாரிப்பாளர் பி.கே.ஆர். பிள்ளையின் மகன் சித்து. வயது 27. அவர் கடந்த 2012ம் ஆண்டு வெளியான துல்கர் சல்மானின் செகண்ட் ஷோ படம் மூலம் நடிகராக பிரபலம் ஆனார்.
சித்து கடந்த 12ம் தேதி கோவா சென்றுள்ளார்.
மரணம்
கோவா சென்ற சித்து அங்குள்ள கடற்கரை ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தது சித்து தான் என்பதை அவரின் தாய் உறுதிபடுத்தியுள்ளார்.
அதிர்ச்சி
27 வயதில் சித்து இறந்த செய்தி அறிந்த மலையாள திரையுலகினர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். சித்து நீரில் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
விசாரணை
சித்துவின் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. சித்து சித்திரம், வந்தனம் உள்ளிட்ட 16 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
|
வருத்தம்
சித்து பிள்ளை மறைவு செய்தி அறிந்து துல்கர் சல்மான் கவலை அடைந்துள்ளார். தனது இரங்கலை துல்கர் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். செகண்ட் ஷோ நாட்களையும் நினைவுகூர்ந்துள்ளார் துல்கர்.