Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஓ மை கடவுளே பட இயக்குனருடன் இணையும் சிம்பு!
சென்னை: சர்ச்சை என்றாலே சிம்பு என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெற்றி என்றால் சிம்பு என்ற நிலை உருவாகி வருகிறது
அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாஸான வெற்றி பெற்று வசூலை அள்ளிய கையோடு இன்றுவரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது
இந்த நிலையில் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு அடுத்த படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது
நீங்கள் இல்லாமல் நான் இல்லை.. ட்விட்டரில் நெகிழ்ந்த சிம்பு… என்ன விஷயம் ?
மிகப் பெரிய பிரேக்காக
சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு இப்போது முழு மூச்சுடன் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் சிம்புவுக்கு மிகப் பெரிய பிரேக்காக அமைந்தது
டைம் லூப் பாணியில்
இந்த நிலையிலும் இதுவரை ஒப்பந்தமாகி இருந்த அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருந்த மாநாடு திரைப்படம் நடக்குமா நடக்காதா என்ற மிகப்பெரிய கேள்விக்குறி உண்டாகி இருக்க வழியாக படக்குழுவும் சிம்புவும் சமாதானம் பேசி நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக பிரம்மாண்டமாக உருவானது மாநாடு. மேலும் படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி பட்டையை கிளப்பியது. டைம் லூப் பாணியில் உருவான மாநாடு தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது இன்று வரை திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து வெற்றி நடைபோடுகிறது
மூன்றாவது முறையாக சிம்பு
வின்னைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் மூன்றாவது முறையாக சிம்பு கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த படத்திற்கு வெந்து தணிந்தது காடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து பத்து தல , கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் சிம்பு நடிக்க உள்ளார்
ஓ மை கடவுளே பட இயக்குனருடன்
இவ்வாறு சிம்புவுக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி கொண்டு நிற்க புதிதாக இளம் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்துவுக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இப்பொழுது ஓ மை கடவுளே தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு தயாராகி வருகிறது இந்த நிலையில் அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்