Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு இருமுடிகட்டி ஐய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்ட சிம்பு!
Recommended Video
சென்னை: நடிகர் சிம்பு இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு காதல் முறிவு மற்றும் படங்களின் தொடர் தோல்வியால் மன உளைச்சலில் இருந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் அவர் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது.
ஆனால் சிம்பு கால்ஷிட் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த படத்தின் பணிகள் கைவிடப்படுவதாக படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதையடுத்து இப்பிரச்சனையில் தலையிட்ட சிம்புவின் தாயார் சொன்னப்படி சிம்பு நடித்துக்கொடுப்பார் என உறுதியளித்தார்.
மாலை போட்ட சிம்பு
இதைத்தொடர்ந்து படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் சிம்பு நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே சிம்பு, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டார்.
நேற்று மாலை புறப்பட்டார்
கடந்த மாதம் 6ஆம் தேதி மாலை அணிந்து, 40 நாட்களுக்கு தொடர்ச்சியாக விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்திருந்தார். அதன்படி நேற்று மாலை சபரிமலைக்கு புறப்பட்டார்.
பத்து நாட்களாகும்
நடிகர் சிம்பு ஐயப்பன் கோவிலில் தரிசனம் முடித்து திரும்புவதற்கு பத்து நாட்களாகும் என கூறப்படுகிறது.
சிம்பு சபரி மலை ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு வந்த பிறகு மாநாடு படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
|
சாமியே சரணம் ஐயப்பா
சிம்பு தலையில் இருமுடி கட்டி ஐயப்பன் கோவிலுக்கு புறப்படும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் சாமியே சரணம் ஐயப்பா என தெரிவித்து வருகின்றனர்.
|
27 ஆண்டுகளுக்கு பிறகு
நடிகர் சிம்பு 1992ஆம் ஆண்டு சபரி மலைக்கு சென்றார். அதனை தொடர்ந்து 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சபரிமலை புறப்பட்டுள்ளார் சிம்பு.