Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பத்து தல-க்காக பயிற்சி செய்த சிம்பு.. கௌதம் கார்த்திக்கும் செஞ்சாராமே.. இயக்குநர் கொடுத்த அப்டேட்!
சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு படத்தையடுத்து தற்போது அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இதனிடையே அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங் இம்மாதம் 28ம் தேதி துவங்கவுள்ளது.
பெல்லாரி அரண்மனையில் அடுத்த கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் டிசம்பர் 14ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்த குடும்ப கப்பல் : சம்சாரம் அது மின்சாரம் படத்திற்கு 36 வயது
நடிகர் சிம்பு
நடிகர் சிம்புவின் மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த படங்களில் ஒன்றாக மாறிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் கதைகளை கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தில் உடல் இளைத்து வித்தியாசமாக காணப்படுகிறார் சிம்பு. இந்தப் படமும் சிம்புவிற்கு மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹன்சிகாவுடன் சிம்பு நடித்துள்ள மஹா படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது.
28ம் தேதி துவங்கும் பத்து தல படம்
இந்நிலையில் அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங் வரும் 28ம் தேதி பெல்லாரி அரண்மனையில் துவங்கவுள்ளதாக தற்போது படக்குழு அப்டேட் தெரிவித்துள்ளது. முன்னதாகவே இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில், சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவு காரணமாக சூட்டிங் தள்ளிப் போனது.
டிசம்பர் 14ல் ரிலீஸ்
படத்தில் சிம்புவிற்கு பிரியா பவானி சங்கர் ஜோடியாகியுள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வரும் டிசம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சூட்டிங் துவங்கவுள்ளது.
பெல்லாரி அரண்மனையில் சூட்டிங்
ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துவரும் இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கவுள்ள நிலையில், இந்தப் படத்தின் முதல் 20 நாட்கள் சூட்டிங் பெல்லாரி அரண்மனையிலும், அடுத்ததாக 10 நாட்கள் திருச்செந்தூரிலும் அடுத்ததாக மேலும் 10 நாட்கள் சூட்டிங் சென்னையிலும் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பயிற்சிகள் மேற்கொண்ட சிம்பு
இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு சில முன் பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு சிறப்பான நடிகர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல கௌதம் கார்த்திக்கும் இந்தப் படத்திற்காக பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.