Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம்… சிம்புவின் உருக்கமான பதிவு !
சென்னை : தொடர்ச்சியான மரணம் மனவேதனையை அளிக்கிறது என்று நடிகர் சிம்பு உருக்கமாக கூறியுள்ளார்.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கேவி ஆனந்த், கடந்த கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த 24ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மூத்த நடிகர் ’தெறி’ செல்லத்துரை மரணம்.. கவின் முதல் அம்ரிதா வரை இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்
இந்நிலையில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தேசிய விருது
தென்மாவின் கொம்பத்து என்ற மலையாள படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் கேவி ஆனந்த். முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல முன்னணி திரைப்படங்களிலும் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.
|
இரங்கல்
கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கேவி ஆனந்ர், கோ, அயன், மாற்றான், அனேகன், கவண் , காப்பான், என பலத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவரது இழப்பு தமிழ் திரைத்துறைக்கு பேரிழப்பு கமல் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவு செய்தி அதிர்ச்சியும் வேதனையையும் அடையச் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதேபோல திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன.
அதிர்ச்சி அளிக்கிறது
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதிர்ந்துக்கூட பேசதாத நல்ல மனிதர் கேவிஆனந்த் அவர்கள், கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழ்நிலை தவிர்க்கும் படியாகிவிட்டது.
மனம் நம்ப மறுக்கிறது
மனம் நம்ப மறுக்கிறது, பொய் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன். இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவசரமாக பயணித்து விட்டார் இறைவனிடம், திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு அவரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என சிம்பு அந்த பதிவில் கூறியுள்ளார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்