Don't Miss!
- News நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா? கோர்ட்டுக்கே போயிட்டாங்க.. இன்று ஐகோர்ட் விசாரணை
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன்: சிம்பு
படப்பிடிப்பிற்கு காலதாமதம் இல்லாமல் சென்று வருவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி வாழ நினைப்பதாகவும், படப்பிடிப்பிற்கு காலதாமதம் இல்லாமல் சென்று வருவதாகவும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் எழுமின் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகர்கள் சிம்பு, விஷால், கார்த்தி, விவேக், உதயா, நடிகை தேவயானி, இயக்குனர் விஜி உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
டிரெய்லரை வெளியிட்ட சிம்பு விழா மேடையில் பேசியதாவது:
3 படங்கள்:
ரசிகர்களுக்காக வருடத்துக்கு மூன்று படங்களாவது பண்ண வேண்டும் என்று அனைவரும் அறிவுரை கூறுகிறார்கள். எனக்கும் அது தெரியும். ஆனால் என் விருப்பப்படி வருடத்துக்கு ஒரு படம் கொடுத்தாலே போதும் என நினைக்கிறேன்.
மாறி விட்டேன்:
நான் யாரையும் கஷ்டப்படுத்த மாட்டேன். யாருக்காகவும் என் சந்தோஷத்தையும் இழக்க மாட்டேன். இருப்பது ஒரு வாழ்க்கை. அதை என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன். இனி நான் படப்பிடிப்புக்கு லேட்டாக வர மாட்டேன். இப்போதும் லேட்டாக போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என இவ்வாறு நடிகர் சிம்பு தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டுவிழா:
நடிகர் சங்கத் தேர்தலின் போது விஷாலை நான் கடுமையாக விமர்சித்தேன். ஆனால் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவுக்கு என்னை அவர் அழைத்தார். நானும் சென்றேன். எப்போதும் எல்லோரும் தவறு செய்வார்கள் என்பதில்லை. என் மனதில் பட்டதை நான் பேசுகிறேன்.
6 சிறுவர்கள்:
நடிகர் விவேக், நடிகை தேவயானி உள்ளிட்டோர் ஆறு சிறுவர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இந்தப் படம், தற்காப்புக் கலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
-
Aavesham movie: 5 நாட்களில் அரைசதம்.. 50 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் ஃபகத் பாசிலின் ஆவேஷம்!
-
தலைவர் 172ஐயும் தயாரிக்கிறதா அந்த நிறுவனம்?.. இயக்குநர் யார் தெரியுமா? படத்தின் டைட்டிலும் ரெடியாம்
-
ஷங்கர் மகள் 2வது திருமணம்.. சங்கீதா விஜய் மட்டுமில்லை.. கீர்த்தி சுரேஷும் கலந்திருக்கிறாரே!