Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரசிகையின் உருக வைக்கும் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு.. தீயாய் பரவும் போஸ்ட்!
சென்னை: தனது ரசிகை ஒருவரின் கடிதத்தை பார்த்து நடிகர் சிம்பு கண் கலங்கிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு கடந்த 22ஆம் தேதி காலை அசத்தல் வீடியோவுடன் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இணைந்தார்.
என் புருஷன நான் ரொம்ப லவ் பண்றேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறி துடித்த கண்ணுக்குட்டி அனிதா!
கழுத்தில் பாம்புடன்
ஆனால் அவர் வெளியிட்ட வீடியோவில் அவரது முகம் முழுவதும் தெரியாமல் போனதால் ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர். இந்நிலையில் சிம்பு நடிக்கும் 'ஈஸ்வரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியானது. இதில் கழுத்தில் பாம்புடன் செம ஸ்மார்ட்டாக இருந்தார் சிம்பு.
ரொம்பவே உருக்கம்
இதில் உடல் எடையைக் குறைத்திருக்கும் சிம்புவின் லுக் ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் ரொம்பவே உருக்கமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
வாழ்க்கை நிலையில்லாதது
டிவிட்டரில் அவர் பகிர்ந்திருப்பதாவது, எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளது. என்னால் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன்.
வந்ததற்கு நன்றி
எனக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் டியர் எஸ்டிஆர் சார், நமஸ்கார், நீங்கள் எங்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்ததற்கு நன்றி. நாங்கள் இப்போது முழுமையடைந்துள்ளோம்.
நீங்கள் இன்ஸ்பைரேஷன்
உங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அதை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் இன்ஸ்பைரேஷன். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் கிடைக்கின்றது. அதற்கு நன்றி.
எல்லாம் உங்களால்தான்
நீங்கள் தான் பெஸ்ட்.. இன்னைக்கு நான் என்னவாக இருக்கிறேனோ.. நாளை என்னவாக இருப்பேனோ.. எல்லாம் உங்களால்தான். ஆல் த பெஸ்ட் சார்.. இப்படிக்கு உங்களின் பக்தை அங்கிதா என முழு கடிதத்தையும் கைப்பட பேனாவால் எழுதி டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
கண் கலங்கிய சிம்பு
தனது ரசிகையின் இந்த கடிதத்தை பார்த்த நடிகர் சிம்பு கண் கலங்கியதாக அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மகத் கூறியுள்ளார். நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக மரணத்தை சந்திக்கும் பிரபலங்களுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே