Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நான்தான் ஹீரோ.. நீங்க எல்லாம்.. சிம்பு கூறிய குட்டிக்கதை.. அண்ணாமலை பாணியில் தனுஷுக்கு சவால்?
நான்தான் ஹீரோ, நான் தோல்வி அடைந்து கீழே இருந்தாலும் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று நடிகர் சிம்பு பேசி உள்ளார்.
சென்னை: நான்தான் ஹீரோ, நான் தோல்வி அடைந்து கீழே இருந்தாலும் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று நடிகர் சிம்பு பேசி உள்ளார். அவர் தனது பேச்சில் சொன்ன குட்டி கதை பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
மாநாடு படம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது.
இயக்குனர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி என்று பெரிய பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
இதோ மீண்டும் வந்துவிட்டேன்.. இனி வரிசையாக நடிப்பேன்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சிம்பு!
சிம்பு பேசினார்
இந்த நிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் சிம்பு கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் சிம்பு சொன்ன குட்டி கதை பெரிய வைரலாகி உள்ளது. அவர பேசியதாவது, ஒருவன் படத்தில் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு தோல்வியே கிடையாது. எல்லாம் அவனுக்கு எளிதாக கிடைக்கும். அவனை எல்லோரும் நல்லவன் என்று நினைப்பார்கள். ஆனால் கடைசியில் அவன் தோற்றுவிடுவான்.
ஹீரோ யார்
இவனுக்கு பெயர்தான் ஸீரோ. அதே சமயம் இன்னொரு பக்கம் இன்னொருவன் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டே இருப்பான். அவனை ஒடுக்க முயற்சி செய்வார்கள். அவனை வளர விட மாட்டார்கள். அவனுக்கு பிரச்சனைகளை தந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவன் கடைசியில் வெற்றிபெறுவான். அவனை ஹீரோ என்பார்கள்.
ஹீரோ நான்
அப்படித்தான் நிஜ வாழ்க்கையிலும் பிரச்சனையே இல்லாமல் இருப்பவன் பெயர் என்ன தெரியுமா. அவன் பெயர் ஸீரோ. ஆனால் என்னை தடுத்தார்கள், என்னை வளர விடாமல் செய்தார்கள். எனக்கு அடுத்தடுத்து பிரச்சனை செய்தார்கள். ஆனால் இப்போது நான் வளர்ந்து நிற்கிறேன். நான் ஹீரோவாக நிற்கிறேன். ஹீரோவாக என்னை மக்கள் ஆக்கி உள்ளனர்.
கதை
நான் இதற்கு சந்தோஷப்படுகிறேன். அண்ணாமலை படத்தில் எல்லாம் இழந்த பின் ரஜினி சவால் விடுவார். மேலே இருப்பவன்தான் வில்லன், கீழே இருப்பவன்தான் சூப்பர் ஸ்டார். நான் இப்போது கீழே இருக்கிறேன். ஆனால் சந்தோசமாக இருக்கிறேன். நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன், என்று சிம்பு கூறியுள்ளார்.
சவால் விட்டார்
சிம்பு கூறிய இந்த கதைக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கதை சொல்லும் போது ரசிகர்கள் ஆரவாரமாக கோஷம் எழுப்பினார்கள்.நடிகர் சிம்பு, நடிகர் தனுஷைத்தான் இப்படி மறைமுகமாக எச்சரிக்கிறார், சவால் விடுகிறார் என்று அவரின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.