Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? சிந்தியுங்கள்-சிங்கமுத்து
கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனைகளே திமுக ஆட்சியை அகற்றப் போதுமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் இவற்றை வைத்து என்ன செய்வது?
விவசாயிகளுக்கு தருவதாகச் சொன்ன 2 ஏக்கர் நிலம் தந்தபாடில்லை. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை.
ஏனென்றால் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தால், யாரும் விற்க முன்வரமாட்டார்கள். அதுவே தண்ணீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டுவிட்டால், வந்த விலைக்கு வாங்கலாம். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்று செயல்படுகின்றனர்.
இலவச டிவி கொடுத்தோம், டிவி கொடுத்தோம் என்கிறார்களே, அதனால் என்ன பயன்? ஜெயலலிதா ஆடு தருவதாக அறிவித்துள்ளார். 'டிவி ' குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? என்பதை உணரந்து வாக்களிக்க வேண்டும்.
அன்மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். இலங்கையில் தமிழ் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.