Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? சிந்தியுங்கள்-சிங்கமுத்து
கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் உள்ள மின்வெட்டு, விலைவாசி உயர்வு பிரச்சனைகளே திமுக ஆட்சியை அகற்றப் போதுமானவை. திமுக தேர்தல் அறிக்கையில் மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் இவற்றை வைத்து என்ன செய்வது?
விவசாயிகளுக்கு தருவதாகச் சொன்ன 2 ஏக்கர் நிலம் தந்தபாடில்லை. இருக்கின்ற நிலத்தில் விவசாயம் செய்வதற்கு தண்ணீரும் கொடுக்கவில்லை.
ஏனென்றால் நிலத்தில் நல்ல விளைச்சல் இருந்தால், யாரும் விற்க முன்வரமாட்டார்கள். அதுவே தண்ணீர் இல்லாமல் நிலங்கள் எல்லாம் வறண்டுவிட்டால், வந்த விலைக்கு வாங்கலாம். அதை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று நல்ல லாபம் பார்க்கலாம் என்று செயல்படுகின்றனர்.
இலவச டிவி கொடுத்தோம், டிவி கொடுத்தோம் என்கிறார்களே, அதனால் என்ன பயன்? ஜெயலலிதா ஆடு தருவதாக அறிவித்துள்ளார். 'டிவி ' குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா? என்பதை உணரந்து வாக்களிக்க வேண்டும்.
அன்மையில் திமுக எம்.பி.க்கள் கூட்டணிக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள். இலங்கையில் தமிழ் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்காக ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றார்.