Don't Miss!
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
காலையிலேயே ஜனநாயக கடமையை ஆற்றிய சிவகார்த்திகேயன்.. ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி!
சென்னை: அதிகாலை முதலே நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், நடிகர் அஜித், நடிகர் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காகவும், பொது மக்களை பெருந்திரளாக வாக்களிக்க ஆர்வம் ஊட்டும் வகையிலும் ஏகப்பட்ட பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினி, கமல், அஜித்.. குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்த சினிமா பிரபலங்கள்!
சமீபத்தில் கலைமாமணி விருது வென்ற நடிகர் சிவகார்த்திகேயனும் காலையிலேயே தனது வாக்கினை செலுத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பாதுகாப்பான முறையில்
தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து கொண்டு வரும் வாக்காளர்களுக்கு, சானிடைசர், கையுறை, வெப்ப சோதனை என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
ரசிகர்களுடன் செல்ஃபி
தேர்தல் நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், நடிகர் அஜித், நடிகர் சிவகுமார், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி, உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் மையங்களில் மக்கள் ஆர்வமுடன் அதிகாலையிலேயே வாக்களித்து வருவது ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
கூட்டத்தோடு கூட்டமாக
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அனைத்து மக்களும் கடைபிடித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும் மாஸ்க் அணிந்தபடி கூட்டத்தோடு கூட்டமாக நின்று வாக்களிக்க காத்திருக்கும் புகைப்படத்தையும் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். வாக்களிக்கும் மையங்களில் மக்கள் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
வரிசையில்
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக்கு அதிகாலையிலேயே வந்த நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். மேலும், ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக சில செல்ஃபி போட்டோக்களையும் ஓட்டு செலுத்தி வெளியே வந்த பிறகு எடுத்து மகிழ்ந்து கொண்டார்.
ஓட்டுப் போட்ட சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனும் காலையிலேயே தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டார். வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் மக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை நடிகர் சிவகார்த்திகேயன் செலுத்தி உள்ளார். வாக்களித்த சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு தனது மை வைத்த விரலை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.