Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அன்பு மகனுக்கு பெயர் சூட்டி… முத்தமிட்ட சிவகார்த்திகேயன்… வைரலாகும் போட்டோ !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன்தாஸ் என பெயர்சூட்டி உள்ளார்.
மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
கோடியில் ஒருவன் தெலுங்கு ட்ரைலரை வெளியிடும் நடிகர் ராணா... டைட்டில் வேற லெவல் போங்க !
மனம்கவர்ந்த
தமிழ் சினிமாவில் மிகவும் எளிமையான குடும்ப பின்னணியிலிருந்து வந்து சாதித்து காட்டிய வெற்றியாளர்கள் மீது ரசிகர்களுக்கு கூடுதலான அன்பும் மதிப்பும் இருக்கும்.அந்த வகையில் ரசிகர்களின் மனங்களை வென்றவர் சிவகார்த்திகேயன்.
மிமிக்ரி கலைஞராக
இன்ஜினியர் மாணவரான சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி மட்டும் ஸ்டேண்ட் அப் காமெடி கலைஞராகப் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்யில் தன்னுடய அபார மிமிக்ரி நகைச்சுவைத் திறமை மூலம் வெற்றிகளைக் குவித்தார். ரஜினி, கமல்அனைவரின் குரலிலும் பேசி அசத்தினார்.
தொகுப்பாளராக
போட்டியாளராக பங்கேற்ற விஜய் தொலைக்காட்சியிலேயே தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். இயல்பாக பேசி சிரிக்க வைத்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மக்களால் நேசிக்கப்படும் நடிகரானார்.
மெரினா ஹீரோவாக
தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடித்த திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படத்தை அடுத்து, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் கதாநாயகனான நடித்தார். இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது.
நல்ல பெயர்
இதையடுத்து மனம்கொத்தி பறவை திரைப்படத்தில் சிறுவயது தோழியை காதலிக்கும் நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அடுத்து கேடிபில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்லபெயரை சிவகார்த்திகேயனுக்கு பெற்றுத்தந்தது.
எதிர்நீச்சல் திருப்புமுனை
சிவகார்த்தியேனுக்கு திரும்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் எதிர் நீச்சல். இப்படத்தின் கதையும் பாட்டும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. அடுத்ததாக மான் கராத்தே இந்த படம் வசூலை வாரிக்குவித்தது. இந்த திரைப்படத்தை அடுத்து மான் கராத்தே போஸ் பிரபலமானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாகவும் இப்படம் இருந்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இயக்குநர் பொன்ராமின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கிராமத்து ரோமியோவாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் காமெடி படம் முழுக்க நிரம்பி வழிந்து சிவகார்த்திகேயனை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ந்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, ரஜினி முருகன் படத்திலும் சூரியுடன் காமெடியில் கலக்கி இருந்தார்.
பல வெற்றிப்படங்கள்
காக்கி சட்டை, ரொமோ, வேலைக்காரன், கனா போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்தார். மேலும், நம்ம வீட்டுப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்து அண்ணன் தங்கை பாசத்தை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த படம்.
டாக்டர் சன்டிவியில்
இயக்குனர் ஆர் ரவிகுமாரின் அயலான் படத்திலும், அதே போல சிபி சக்ரவர்த்தி என்ற புது இயக்குனர் இயக்கிய டான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் செப்டம்பர் மாதம் நெட்ஃபிளிக்ஸிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 4ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உள்ளது.
இரண்டாவதாக ஆண்குழந்தை
சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 12ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு மகன் பிறந்திருப்பது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், 18 வருடங்களுக்கு பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலி போக்க என் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி.அம்மாவும் குழந்தையும் நலம் என பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
குகன் தாஸ்
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும் ஆசியோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டியிருக்கிறோம் என்று கூறி குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தபுகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.