Don't Miss!
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கர்நாடக சங்கீத பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா! - நடிகர் சிவகுமார்
சென்னை: கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மர் பாலமுரளிகிருஷ்ணா என்று நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார்.
மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு இரங்கல் தெரிவித்து சிவகுமார் விடுத்துள்ள அறிக்கை:
பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம். அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள்
ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் ஏபி நாகராஜன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவிளையாடல் படத்தில் டிஎஸ் பாலையா அவர்களுக்கு 'ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா....' என்ற பாடலைப் பாடினார். அந்தப் படம் வெற்றிப் படமாக ஓடிதற்கு அந்த பாடல் 25 சதவிகிதம் காரணம்மாக அமைந்தது. ஏன் என்றால் மாறுபட்ட குரல். மேலும் டிஎஸ் பாலையா வின் நடிப்பு. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை.
ஆனால் இளையராஜாவின் இசையில் கவிக்குயில் படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மகளூரில் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார், ராதா வேடத்தில் நடித்தோம். அந்தப் பாடல் 'சின்ன கண்ணன் அழைகிறான்...' என்கிற பாடல். அந்தப் பாடல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காகப் பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
-இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.