Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போய் வா நண்பா..அடுத்த பிறவியில் சந்திப்போம்..சிவகுமார் உருக்கம் !
சென்னை : விசுவின் மறைவுக்கு குறித்து இரங்கல் தெரிவித்து நடிகர் சிவக்குமார் கவிதை வடிவில் கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
அன்பு விசு !
டைரக்டர் கே. பாலச்சந்தரை அடுத்து நகரத்து நடுத்தர
மக்களின் வாழ்க்கையை
உணர்வு பூர்வமாக
மேடையிலும் திரையிலும் கூர்மையான வசனங்களால்
படம் பிடித்து காட்டியவர்
நீங்கள்..
'சம்சாரம் அது மின்சாரம்'-
'மணல் கயிறு'- இரண்டு படங்கள்
போதும்.
உங்களை
உலகம் புரிந்து கொள்ள..
'அரட்டை அரங்கம்'-
அகில உலகப் புகழை
உங்களுக்கு சேர்த்தது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கெல்லாம் படையெடுத்து
குக்கிராமத்தில் உள்ள
ஏழை மாணவ மாணவிகளின் ஏக்கங்களை, வலிகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்து
பல பேருக்கு வாழ்வில்
ஒளியேற்றி வைத்தீர்கள்.
மக்கனின் வாழ்க்கைப் போராட்டங்களை
ரத்தமும் சதையுமாக
படைப்புக்களில்
வெளிப்படுத்திய
நீங்கள்
தனி மனித வாழ்க்கையிலும்
ஆரோக்கியத்துக்காக
கடைசி நிமிடம் வரை
தளராது போராடினீர்கள் .
இறைவன் விதித்த
மானுட வாழ்வை
கடைசி மணித்துளி வரை
வாழ்ந்து விட்டீர்கள்..
மண்ணில் பிறந்த மனிதன்
ஒரு நாள்
இந்த மண்ணை விட்டு
பிரிந்தே ஆகவேண்டும்.
உங்களுக்கு
கடைசி மரியாதை
செய்யக்கூட முடியாதபடி கொரோனா வைரஸ் எச்சரிக்கையால்
பஸ் பயணம்,
ரயில் பயணம்,
விமானப்பயணம்
தவிர்க்கும்படி டாக்டர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்..
வெளியூர் சென்றவர்கள் வெளியூரிலும், உள்ளூரில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயும் அடைபட்டு கிடக்க
144 தடை உத்தரவு வேறு.
என் உயிர் பிரிந்தால் வெளிநாட்டிலிருக்கும்
என் குழந்தைகள்
இந்தியா திரும்பும் வரை
நான்
அனாதைப் பிணம்தான்
என்று உருக்கமாக
ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தீர்கள்.
அந்தக்குறை இல்லாமல்
மக்கள் கடைசி தருணத்தில் உங்களோடு
இருந்தார்கள் என்று
அறிகிறேன்.
பூமியில் வாழ்ந்த காலம் வரை அர்த்தமுள்ள வாழ்வு,
மக்களுக்கு பயன்படும் வாழ்வு வாழ்ந்து விட்டாய்
போய் வா நண்பா !
அடுத்த பிறவியில் சந்திப்போம்'
-சிவகுமார்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!