twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார்.. கடுப்பான விஜய் ரசிகர்கள்..விளக்கிய SJ சூர்யா!

    |

    சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை பிடித்துவிட்டார் என்று எஸ்.ஜே.சூர்யா கூறியதாக இணையத்தில் செய்தி வெளியானது.

    இந்த செய்தியை பார்த்த தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா, உரிய விளக்கம் கொடுத்துள்ளார்.

    இன்று நேற்று நாளை இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா... இப்பவே வேலை துவங்கிடுச்சாம்! இன்று நேற்று நாளை இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா... இப்பவே வேலை துவங்கிடுச்சாம்!

    எஸ்.ஜே.சூர்யா

    எஸ்.ஜே.சூர்யா

    இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் இயக்கத்தில் உருவான வாலி மற்றும் குஷி இரண்டு படங்களுமே, அதில் நடித்த நடிகர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாகவே அமைந்தன.

    மிரட்டலான நடிப்பு

    மிரட்டலான நடிப்பு

    இயக்கம் தான் தாறுமாறு என்றால்.. நடிப்பு அதுக்கும் மேல இருக்கும். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியன மாநாடு திரைப்படத்தில் சிம்பு ஒரு பக்கம் நடிப்பில் மிரட்டி இருப்பார், மறுபக்கம் எஸ்.ஜே. சூர்யா தலைவரே... தலைவரே என்று, வந்தான்... சுட்டான்... செத்தான் ரிப்பீட்டு என்று மூச்சு விடாமல் பேசி திரையரங்கில் கைத்தட்டல் வாரிக்குவித்தார்.

    டான்

    டான்

    எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னியெடுக்கும் எஸ்.ஜே. சூர்யா சிவகார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் டான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில், மாளவிகா மோகன், சூரி,பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே 13ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

    விஜய் இடத்தை பிடித்துவிட்டார்

    விஜய் இடத்தை பிடித்துவிட்டார்

    இந்த நிலையில், டான் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார் என அவர் கூறியதாக அந்த வார இதழின் ட்விட்டர் கணக்கில் வீடியோ வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்து, கடுப்பான விஜய்யின் ரசிகர்கள் அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

    எஸ்.ஜே .சூர்யா விளக்கம்

    எஸ்.ஜே .சூர்யா விளக்கம்

    இதனால் கடுப்பான எஸ்.ஜே .சூர்யா, தனது ட்விட்டர் பக்கததில் அந்த வீடியோவை பதிவிட்டு விளக்கம் கொடுத்து உள்ளார். அதாவது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கு ஒரு ஸ்பெஷல் இடம் கொடுத்திருக்கிறார்கள், அதே போல சிவகார்த்திகேயனுக்கும் கொடுக்கிறார்கள் என்று தான் சொன்னேன் ஏன் சொல்லாதை எழுதுறீங்க என்று கேட்டுள்ளார்.

    English summary
    SJ Suriya Explanation gives Vijay fans, விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார் என்று நான் கூறவில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X