Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அவரோட நடிச்சது இன்னும் அப்படியே மனசுல இருக்கு.. பவுன்ராஜ் மறைவு.. நடிகர் சூரி இரங்கல்!
சென்னை: நடிகர் பவுன்ராஜ் மறைவுக்கு நகைச்சுவை நடிகரான சூரி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
இணை இயக்குநரும் நடிகருமான பவுன்ராஜ் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் 45 ஆண்டு கால இசைப்பயணம்
இயக்குநர் பொன்ராமின் நெருங்கிய நண்பரான பவுன்ராஜ் அவர் இயக்கிய பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
என்ன சோதனை?
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் நடிகர் பவுன்ராஜ். இதென்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார்.
பெரும் அதிர்ச்சி
ரஜினி முருகன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இந்நிலையில் அவரது திடீர் மரணம் தமிழ் சினிமாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூரி இரங்கல்
அவருடைய மறைவுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பவுன்ராஜூடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயல்பான நகைச்சுவை நடிகன்
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு, அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.