கொரோனா நிவாரண நிதி… ரூ10 லட்சம் வழங்கினார் நடிகர் சூரி!
சென்னை : முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
Recommended Video
மேலும் தனது மகன், மகள் சார்பில் ரூ25 ஆயிரத்திற்கான ரொக்கப்பணத்தையும் திமுக எம்.எல்.ஏ உதயநிதிஸ்டாலினிடம் வழங்கினார்.
இதை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வேண்டுகோள்
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து நாட்டையை உலுக்கி வருகிறது. மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஜிசன் தட்டுப்பாடு, முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண நிதி, போன்றவற்றை சமாளிக்க போதுமான நிதிஉதவியை வழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தாராள நிதி
முதல்வர் அவரின் கோரிக்கையைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்களால் முயன்ற நிதியை அளித்து அரசுக்கு பேருதவி செய்தனர். இதனால் தற்போது நிலைமை ஓரளவு சீராகி வருவதை நாம் பார்த்து வருகிறார்.

ரூ 10 லட்சம்
இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சூரி ரூ10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும், தனது மகள் வெண்ணிலா மற்றும மகன் சர்வான் சார்பாக ரூ25 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் நடிகர் சூரி, சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

நன்றி
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் சூரி கொரோனா தடுப்பு பணிக்கான ரூ10 லட்சத்திற்கான கொலையை என்னிடம் வழங்கினார் . சூரி அண்ணன் அவர்களுக்கு என் ன்பும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











