Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
‘’ஆலமரத்தை இழந்த நாள் இன்று’’… ட்விட்டரில் உருகிய சூரி !
சென்னை : நடிகர் சூரி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அசுரன் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்
இந்த திரைப்படத்தில், விஜய்சேதுபதி, சூரி,பவானி ஸ்ரீ , கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.
சினிமாவில் இருந்து விலக அமீர்கான் முடிவு... கண்ணீர் விட்டு கதறி அழுத மாஜி மனைவி
சூரி
நகைச்சுவை நடிகரான சூரி, அஜித், விஜய்,ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரி, விடுதலை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் சூரி. அதற்காக கடுமையாக உழைத்து தனது உடலை சிக்கென சிக்ஸ் பேக்காக மாற்றி உள்ளார் சூரி.
ஃபர்ஸ்ட்லுக்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. அந்த போஸ்டரில் சூரி கான்ஸ்டபில் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் இருந்தனர். இந்த போஸ்டர் மிகுந்த வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
வாடிவாசல்
விஜய்சேதுபதியின் தேதி கிடைக்காததால், விடுதலை திரைப்படம் இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது. இதனால், வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
உருக்கமான பதிவு
இந்நிலையில், நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று, மீசை வைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள்.. அப்பாவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி என்று பதிவிட்டுள்ளார்.