Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆன்லைனில் பாடம் நடத்திய சூரி.. குறும்பாக கேள்வி கேட்ட அரசு பள்ளி மாணவர்கள்.. கண்டுரசித்த அதிகாரிகள்!
சென்னை: மதுரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சூரி ஆன்லைனில் பாடம் நடத்திய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால், ஷீட்டிங் இன்றி உள்ள நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டு என்று விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார்.
சினிமாவை தாண்டி, யானை மரணம், ஜார்ஜ் பிளாய்டு என ஒலித்த 'தலைவன் இருக்கின்றான்' லைவ்!
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடினார்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து நகைச்சுவையாக அவர் பேசினார். இதனை பார்த்த மாணவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். சில மாணவர்கள் நடிகர் சூரியிடம் குறும்பு கேள்விகளையும் கேட்டனர். இதனை அதிகாரிகளும் கண்டு ரசித்தனர்.