Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆன்லைனில் பாடம் நடத்திய சூரி.. குறும்பாக கேள்வி கேட்ட அரசு பள்ளி மாணவர்கள்.. கண்டுரசித்த அதிகாரிகள்!
சென்னை: மதுரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடிகர் சூரி ஆன்லைனில் பாடம் நடத்திய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால், ஷீட்டிங் இன்றி உள்ள நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் நேரத்தை கழித்து வருகிறார். அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டு என்று விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியுள்ளார்.
சினிமாவை தாண்டி, யானை மரணம், ஜார்ஜ் பிளாய்டு என ஒலித்த 'தலைவன் இருக்கின்றான்' லைவ்!
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வீட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நினைவுப்படுத்தும் வகையில் சிரிப்போம், சிந்திப்போம் என்ற தலைப்பில் நடிகர் சூரி கலந்துரையாடினார்.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து நகைச்சுவையாக அவர் பேசினார். இதனை பார்த்த மாணவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். சில மாணவர்கள் நடிகர் சூரியிடம் குறும்பு கேள்விகளையும் கேட்டனர். இதனை அதிகாரிகளும் கண்டு ரசித்தனர்.