மீண்டும் வில்லனாகும் சசிக்குமாரின் வில்லன்!
சென்னை: சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமாருக்கு வில்லனாக நடித்த சவுந்தரராஜா மீண்டும் வில்லனாகியுள்ளார்.
நடிகர் சசிக்குமாருடன் சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் சவுந்தரராஜா. கூடவே இருந்து குழி பறிக்கும் கேரக்டரில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சவுந்தரராஜா.

இதைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் சவுந்தரராஜா. இந்நிலையில் விசாரம் படத்தின் மூலம் மீண்டும் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இந்தப் படம் நெல்லை மாவட்டத்தில் படமாக்கப்படுகிறது. நடிகர் சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் உருவாகும் விஜயின் 63வது படமான பிகில் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











