Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா வைரஸ் காரணமாக.. திடீரென அபார்ட்மென்ட் செக்யூரிட்டியாக மாறிய நடிகர்.. இது புது அனுபவமாம்!
பெங்களூரு: கொரோனா காரணமாக, பிரபல நடிகர் ஒருவர் செக்யூரிட்டியாக மாறியுள்ளார்.
உலகை மிரட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
’கண்ணுக்குள் நிலவு’ செட்டில் நடந்த விஜய் ரிசப்ஷன்.. ஷாலினியின் ரியாக்ஷன்.. அரிதான புகைப்படங்கள்!
தினசரி சம்பளம்
இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கபட்டதால் கடந்த 4 மாதமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் பெரும் பணக்கஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
மளிகை கடை
இதனால், பலர் தங்கள் தொழிலை மாற்றியுள்ளனர். பிரபலங்களாக இருக்கும் சினிமா நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நடிகர்கள் மளிகை கடை திறந்துள்ளனர். சிலர் காய்கறிகள் விற்கின்றனர். சில நடிகர்கள் பழங்கள் விற்று வருகின்றனர். கேரளாவில் நடிகர் ஒருவர் மீன் கடை திறந்துள்ளார்.
ஶ்ரீநாத் வசிஸ்தா
இந்நிலையில் பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ஶ்ரீநாத் வசிஸ்தா, செக்யூரிட்டியாக மாறி இருக்கிறார். இவர், டாக்டர் சுகன்யா, மந்தனா உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பச்சன் என்ற படத்தில் நடிகர் நாசருக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். செக்யூரிட்டியாக மாறியுள்ள அவர், பிபிஇ கிட் மற்றும் தெர்மல் ஸ்கேனருடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் செக்யூரிட்டிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த 3 செக்யூரிட்டிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் குடியிருப்பு சங்கம், செக்யூரிட்டியாக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது. எனது ஷிப்ட் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை. நேற்று என் மகன் செக்யூரிட்டியாக இருந்தான். இது எனக்கு புது அனுபவம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.