Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஏமாற்றினர்.. படங்கள் தொடர் தோல்வியால் வெளிநாட்டுக்கு பயந்து ஓடிவிட்டேன்: நடிகர் ஓபன் டாக்!
சென்னை: தான் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ந்து தோல்வியடைந்ததால் வெளிநாட்டுக்கு பயந்து ஓடிவிட்டதாக இளம் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன். இவர் வாரணம் ஆயிரம் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர் செல் போன் லு பேலன்ஸ் என்ற பாடலை பாடியதன் மூலம் தெலுங்கில் பிரபலமானார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் சினேக கீதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
மீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட கேட்டா அசந்துருவீங்க!
பாதிப் படங்கள் தோல்வி
இதைத்தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்ததால் தெலுங்கில் பிஸியான நடிகராக இருந்தார். ஆனால் அவர் நடித்த படங்களில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன.
நரகாசுரன்
தமிழிலும் யாருடா மகேஷ், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நரகாசுரன், கண்ணாடி, கசடதபற ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஏமாற்றிவிட்டார்கள்
இந்நிலையில் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் சந்தீப் கிஷன், தனது படங்கள் தோல்வியடைந்ததால் 14 படங்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிட்டதாக கூறினார். வெற்றி பெற்ற படங்களுக்கு கூட சம்பளம் கொடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார் சந்தீப் கிஷன்.
வெளிநாட்டுக்கு ஓடிவிட்டேன்
மேலும் தனது படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் பயந்துபோய் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாகவும் சந்தீப் கிஷன் கூறியுள்ளார். 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று கூறிய சந்தீப் கிஷன், தற்போது திரும்பி வந்ததும் மீண்டும் பட வாய்ப்புகள் வந்ததால் நடிக்க தொடங்கியிருக்கிறேன் என்றார்.