Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகர், பாடகர் சுராங்கனி மனோகர் காலமானார்! #CeylonManohar
Recommended Video
சென்னை : சிலோன் மனோகர் என அழைக்கப்பட்ட பிரபல நடிகரும், பாடகருமான ஏ.இ.மனோகரன் சென்னையில் நேற்று காலமானார்.
இவர் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர்.
பாப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இலங்கையிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
சுராங்கனி மனோகர்
1970-களில் இளையராஜா இசையில் வெளிவந்த 'அவர் எனக்கே சொந்தம்' என்ற படத்தில், இலங்கையில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்று பயன்படுத்தப்பட்டது. "சுராங்கனி" என்ற அந்தப் பாடலை இயற்றிப் பாடியவர் சிலோன் மனோகர். இவர் பாடிய "சுராங்கனி சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா.." என்ற பைலா பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.
வில்லன் நடிகர்
இலங்கையில் பிறந்த அவர், சென்னைக்கு வந்து பாடகரானார். 'ஜேஜே', 'காஷ்மீர் காதலி', 'தீ' , 'அதே கண்கள்', 'ராஜா நீ வாழ்க', 'காட்டுக்குள் திருவிழா', 'மாங்குடி மைனர்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். நடிகர் கமலஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா' படத்தில் பாடி நடித்திருக்கிறார்.
பாப் இசை சக்ரவர்த்தி
தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். ஐந்து மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிலோன் மனோகர், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப் இசை சக்ரவர்த்தி என்ற பட்டமும் பெற்றுள்ளார்.
காலமானார்
சென்னையில் வசித்து வந்த சிலோன் மனோகர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.