Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கதை ரெடியாம்... கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்: டைரக்டராகும் நடிகர் சுரேஷ்!
சென்னை: நடிகர் சுரேஷ் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சுரேஷ். இதுவரை தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரேஷ். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.
இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வரும் சுரேஷ் விரைவில் ஒரு படத்தை இயக்கி டைரக்டராகவும் இருக்கிறாராம்.
நீண்ட நாள் ஆசை...
இதுபற்றி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. 250 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருக்கிறது.
போதுமான அனுபவம்...
100க்கும் மேற்பட்ட டைரக்டர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் கழித்திருக்கிறேன். இது போதாதா ஒரு படம் டைரக்ட் பண்ணுவதற்கு.
இரண்டு கதைகள்...
லவ் அண்ட் காமெடி, ஆக்ஷன் வித் த்ரில்லர் என இரண்டு கதைகள் தயாராக இருக்கிறது. நடிகர்களுடன் பேசி வருகிறேன்.
விரைவில் அறிவிப்பு....
அது முடிவானதும் முறையான அறிவிப்பு வரும். நடித்துக் கொண்டே படங்களும் டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.