Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கதை ரெடியாம்... கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்: டைரக்டராகும் நடிகர் சுரேஷ்!
சென்னை: நடிகர் சுரேஷ் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சுரேஷ். இதுவரை தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரேஷ். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.
இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வரும் சுரேஷ் விரைவில் ஒரு படத்தை இயக்கி டைரக்டராகவும் இருக்கிறாராம்.
நீண்ட நாள் ஆசை...
இதுபற்றி, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. 250 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருக்கிறது.
போதுமான அனுபவம்...
100க்கும் மேற்பட்ட டைரக்டர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் கழித்திருக்கிறேன். இது போதாதா ஒரு படம் டைரக்ட் பண்ணுவதற்கு.
இரண்டு கதைகள்...
லவ் அண்ட் காமெடி, ஆக்ஷன் வித் த்ரில்லர் என இரண்டு கதைகள் தயாராக இருக்கிறது. நடிகர்களுடன் பேசி வருகிறேன்.
விரைவில் அறிவிப்பு....
அது முடிவானதும் முறையான அறிவிப்பு வரும். நடித்துக் கொண்டே படங்களும் டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.