Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இதயத்தில் துளை ஏற்பட்டது போன்று உணர்கிறேன்.. நடிகர் சூர்யா உருக்கம்!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு இதயத்தில் துளை ஏற்பட்டது போன்று உள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இசை உலகின் ஜாம்பவான், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்திய சினிமாவே இரங்கல் தெரிவித்து வருகிறது.
அவரது உடல் சென்னையை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க இன்று நல் அடக்கம் செய்யப்பட்டது.
இரங்கல்
அவரது உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா, அமீர், தேவி ஸ்ரீபிரசாத், உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் கருத்து பதிவிட்டும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் அஞ்சலி
நடிகர் விஜய் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்று எஸ்பிபியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் எஸ்பிபி சரணுக்கும் நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் அர்ஜூனும் எஸ்பிபியின் புகழ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர் எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சூர்யா இரங்கல்
நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதயத்தில் துளை
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என் இதயத்தில் ஒரு துளை ஏற்பட்டது போல் உணருகிறேன். இது வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணங்களை இழப்பதைப் போன்று உள்ளது! எஸ்பிபி சார் நீங்கள் நித்தியம்.. உங்கள் சாதனைகள் ஈடுசெய்ய முடியாதவை! பணிவு என்றால் என்ன என்பதை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி. வாழ்க்கைக்கான உங்கள் வேலையை எப்போதும் புதையலாக இருக்கும்! பிரார்த்தனைகளும் அமைதியும்.. என குறிப்பிட்டுள்ளார்.