Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜோடியாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சூர்யா… ஜோதிகா!
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
விவாகரத்தாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ரஞ்சித் - பிரியா ராமன்.. தீயாய் பரவும் போட்டோ!
தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பகிர்வது,பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்து வருகிறது.
தடுப்பூசி
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் போடப்பட்டது.
தடுப்பூசி போடுவதில் ஆர்வம்
மே1 ந்தேதியிலிருந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வந்தனர். இதனால் தடுப்பூசி போடும் பணி மந்தமாகவே இருந்தது. அரசு மேற்கொண்ட விழிப்புணர்வை அடுத்து தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது.
80 லட்சம் பேர் தடுப்பூசி
இன்று ஒரே நாளில் நாட்டில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. நேற்று 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இன்று 80 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் ஜோடியாக சென்று கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பல லைக்குகளை பெற்று வருகிறது.