Don't Miss!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- News இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கோவாவில் சூட்டிங் முடித்த சூர்யா 42 டீம்.. சென்னை திரும்பிய சூர்யா.. விரைவில் நெக்ஸ்ட் அப்டேட்!
சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது.
சூர்யா 42 படத்தின் சூட்டிங் கோவாவில் இரண்டாவது கட்டமாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இந்த சூட்டிங்கில் சூர்யா, திஷா பட்டானி ஆகியோர் பங்கேற்ற நிலையில், கோவாவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடந்தது.
மிரட்டலான படத்தில் நாட்டுப்புற பாடல்.. சர்தார் படத்திற்காக கலக்கலாக பாடிய நடிகர் கார்த்தி!
அடுத்தடுத்த சூர்யா படங்கள்
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் சூர்யா. தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.
வணங்கான் படம்
விக்ரம் படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங் 35 நாட்களை கடந்து நடந்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா.
சூர்யா 42 படம்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்டு சில தினங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவாவில் அடுத்தக்கட்ட சூட்டிங், பிரத்யேகமாக செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கில் கதையின் நாயகியான திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
சூர்யா 42 சூட்டிங்
கடந்த சில வாரங்களாக நடந்த இந்த சூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னெப்பேதும் இல்லாத வகையில் சூர்யாவின் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக 2 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவா சூட்டிங் நிறைவு
இதனிடையே கோவாவில் நடைபெற்ற இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில்தான் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.