Don't Miss!
- News சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“ரஜினி சார்.. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்து விட்டீர்கள்”.. நன்றி சொன்ன சூர்யா!
நடிகர் ரஜினிக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: தேசிய கல்வி கொள்கை விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த ரஜினிக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு, பாரதிய ஜனதா கட்சியினரும், அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆதரவாளர்கள் சூர்யாவை சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்தனர்.
சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் கமல், சீமான் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். ஒரு குடிமகனாக, சகமனிதனாகவே தனது கருத்தை முன்வைத்ததாக சூர்யா விளக்கமளித்தார்.
இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக நடிகர் ரஜினியும் குரல் கொடுத்திருக்கிறார். நேற்று நடைபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
Dearest @rajinikanth Sir truly respect your valuable time and support!! Thank you for a life time memory 🙏🏼 #KaappaanAudioLaunch @LycaProductions @anavenkat pic.twitter.com/kSTHx6Ntrc
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2019
தனக்கு ஆதரவளித்த ரஜினிக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர், "ரஜினி சார் எனக்கு நேரம் செலவழித்ததற்கும், ஆதரவு அளித்ததற்கும் நன்றி. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்ததற்கு நன்றி", என குறிப்பிட்டுள்ளார்.