Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கடமையை செய்த சுஷாந்த்.. நொறுங்கும் வேலைக்காரர்கள்!
சென்னை: நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகர் சுஷாந்த் தொலைக்காட்சித்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
சுஷாந்த் சிங்கின் கடைசி படம் .. தியேட்டரில் வெளியிட வேண்டும்.. ஏ.ஆர் ரஹ்மான் ட்விட் !
படங்களிலிருந்து நீக்கம்
இந்நிலையில் பாலிவுட்டில் உள்ள சில பெரும் தலைகள், சுஷாந்த் சிங் பீகாரை பூர்விகமாக கொண்டவர் என்பதால் அவரை ஓரம் கட்டியதாக தெரிகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒப்பந்தம் செய்யப்பட்ட 7 படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மகேஷ் பட்தான்..
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சுஷாந்த். அந்த நேரத்தில் அவரது காதலியான ரியா சக்கரபர்த்தியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ரியா, சுஷாந்தை பிரிந்ததற்கு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட்தான் காரணம் என கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி
இதேபோல் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் சில பெரிய இடத்து பிள்ளைகள் சுஷாந்துக்கு பட வாய்ப்புகள் கொடுக்கக்கூடாது என அவரை பிளாக் செய்ததாக தெரிகிறது. இதனால் பட வாயப்புகள் இல்லாததால் நிதி நெருக்கடியிலும் இருந்துள்ளார் சுஷாந்த்.
வேலைக்காரர்கள்
அவரது வீட்டிற்கு மட்டுமே நான்கரை லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சுஷாந்த், தான் தற்கொலை செய்வதற்கு மூன்று நாட்கள் முன்னதாகதான் சம்பளம் கொடுத்துள்ளார். பணியாட்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கான சம்பளத்தை அவர்களின் கைகளில் கொடுத்துள்ளார் சுஷாந்த்.
Recommended Video
தன்னிடம் பணமில்லை
போலீஸ் விசாரணையில் சுஷாந்த் தங்களுக்கு சம்பளம் கொடுத்த தகவலை வேலைக்காரர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு மேல் சம்பளம் கொடுக்க தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் சுஷாந்த். இதன் மூலம் சுஷாந்த் நிதி நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!