Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கடமையை செய்த சுஷாந்த்.. நொறுங்கும் வேலைக்காரர்கள்!
சென்னை: நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிக மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நடிகர் சுஷாந்த் தொலைக்காட்சித்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
சுஷாந்த் சிங்கின் கடைசி படம் .. தியேட்டரில் வெளியிட வேண்டும்.. ஏ.ஆர் ரஹ்மான் ட்விட் !
படங்களிலிருந்து நீக்கம்
இந்நிலையில் பாலிவுட்டில் உள்ள சில பெரும் தலைகள், சுஷாந்த் சிங் பீகாரை பூர்விகமாக கொண்டவர் என்பதால் அவரை ஓரம் கட்டியதாக தெரிகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒப்பந்தம் செய்யப்பட்ட 7 படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
மகேஷ் பட்தான்..
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சுஷாந்த். அந்த நேரத்தில் அவரது காதலியான ரியா சக்கரபர்த்தியும் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். ரியா, சுஷாந்தை பிரிந்ததற்கு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட்தான் காரணம் என கூறப்படுகிறது.
நிதி நெருக்கடி
இதேபோல் பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் சில பெரிய இடத்து பிள்ளைகள் சுஷாந்துக்கு பட வாய்ப்புகள் கொடுக்கக்கூடாது என அவரை பிளாக் செய்ததாக தெரிகிறது. இதனால் பட வாயப்புகள் இல்லாததால் நிதி நெருக்கடியிலும் இருந்துள்ளார் சுஷாந்த்.
வேலைக்காரர்கள்
அவரது வீட்டிற்கு மட்டுமே நான்கரை லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சுஷாந்த், தான் தற்கொலை செய்வதற்கு மூன்று நாட்கள் முன்னதாகதான் சம்பளம் கொடுத்துள்ளார். பணியாட்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கான சம்பளத்தை அவர்களின் கைகளில் கொடுத்துள்ளார் சுஷாந்த்.
Recommended Video
தன்னிடம் பணமில்லை
போலீஸ் விசாரணையில் சுஷாந்த் தங்களுக்கு சம்பளம் கொடுத்த தகவலை வேலைக்காரர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு மேல் சம்பளம் கொடுக்க தன்னிடம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார் சுஷாந்த். இதன் மூலம் சுஷாந்த் நிதி நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.