Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கதறியப்படியே சுஷாந்த் சிங்கின் அஸ்தியை கங்கையில் கரைத்த குடும்பத்தினர்.. நெஞ்சை பிழியும் போட்டோஸ்!
சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் கங்கையில் கரைத்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் நாடு முழுக்க பெரும் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பல படங்களில் நடித்துள்ள சுஷாந்த் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிக மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. 34 வயதே ஆன சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரைத்துறையும் உலுக்கி வருகிறது.
உன் அனைத்து வேதனைகளுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன்.. நடிகர் சுஷாந்த் சிங் சகோதரி உருக்கம்!
8 பேர் மீது வழக்கு
இந்நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் என சில திரைத்துறை பிரபலங்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணமானவர்கள் என சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெரும் புள்ளிகள்
கடந்த 6 மாதங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 7 படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கியதும் அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் பாலிவுட்டில் உள்ள பெரும் புள்ளிகள்தான். பாலிவுட்டில் கோலொச்சி வரும் சில வாரிசுகள் சுஷாந்தை ஓரங்கட்டியதாக தகவல்கள் பரவி வருகின்றன.
அஸ்தி கரைப்பு
இதுகுறித்து போலீசார் ஒரு பக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அஸ்தியை அவரது குடும்பத்தினர் கங்கையில் கரைத்த போட்டோக்கள் வெளியாகியுள்ளது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், எத்தனையோ படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டிய நடிகர் இப்படி ஆகிவிட்டாரே என கலங்கி வருகின்றனர்.
உடல் தகனம்
கடந்த 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த நிலையில், உடனடியாக அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மும்பை காப்பர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கடந்த திங்கள் கிழமை மும்பை பவன் ஹன்ஸ் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கதறியப்படியே..
அவர் இறந்த 5ஆம் நாளான இன்று அவரது அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்டுள்ளது. சுஷாந்தின் தந்தை மற்றும் அவரது சகோதரிகள் கங்கை ஆற்றில் படகில் சென்று அவரது அஸ்தியை கரைத்துள்ளனர். அவர்கள் கதறி அழுதப்படியே அஸ்தியை ஆற்றில் கரைத்தனர்