Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிறு கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தவர் செல்லத்துரை… உதயநிதி ஸ்டாலின் புகழாரம் !
சென்னை : தமிழ் திரைத்துறையில் மூத்த நடிகரும் குணசித்திர நடிகருமான செல்லத்துரை அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
வீட்டில் சுயநினைவின்றி இருந்த இவரை, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
என் முதல் படத்தின் ஒளிப்பதிவாளர்.. இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவால் மனம் உடைந்து போன விஷால்
இவருடைய இறப்பு திரைத்துறையினர் மத்தியில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல படங்களில்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்திருந்த கத்தி திரைப்படத்திலும், நயன்தாரா நடித்திருந்த அறம், அட்லி இயக்கிய தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
முக்கியமான கதாபாத்திரம்
விஜய்யுடன் தெறி திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் தந்தை கதாபாத்திரம் காண்போர் கண்களில் கண்ணீரை வரவைக்கும் வகையில் தத்துரூபமாக அமைந்து இருக்கும். இந்த படத்திற்கே பெரும் திரும்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இவரின் வசனம் அந்த படத்தில் அமைந்து இருக்கும்.
அதிர்ச்சி
தனுஷூன் மாரி படத்திலும், உதயநிதி ஸ்டாலுடன் மனிதன், ராஜா ராணி, நட்பே துணை ஆகிய படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் செல்லத்துரை. இவரின் மரண செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இவருக்கு ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றன.
குணச்சித்திர நடிகர் அண்ணன் செல்லத்துரை அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன்.சிறு கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்த திறமைக்காரர்.மனிதன் திரைப்படத்தில் நடித்த போது அவரோடு பழகும் வாய்ப்பை பெற்றேன். ஆகச்சிறந்த மனிதர். அண்ணனின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தாருக்கு ஆறுதல். pic.twitter.com/EqCm3nSIKS
— Udhay (Udhaystalin) April 30, 2021
முத்திரை பதித்தவர்
இந்த வகையில், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குணச்சித்திர நடிகர் அண்ணன் செல்லத்துரை அவர்கள் மறைந்தது அறிந்து வேதனையடைந்தேன். சிறு கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்த திறமைக்காரர். மனிதன் திரைப்படத்தில் நடித்த போது அவரோடு பழகும் வாய்ப்பை பெற்றேன். ஆகச்சிறந்த மனிதர். அண்ணனின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தாருக்கு ஆறுதல் என்று பதிவிட்டுள்ளார்.