Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அவரின் அகால மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.. சேது மரணம் குறித்து உதயநிதி உருக்கம்!
சென்னை: நடிகர் சேதுராமனின் மறைவு குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார்.
Recommended Video
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சேதுராமன். தோல் சிகிச்சை மருத்துவரான இவர் சென்னை அண்ணாநகரில் ZI Clinic என்ற மருத்துவமனையை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் மருத்துவ துறையினரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஒன்றரை வயது மகள்
36 வயதான சேதுவின் மரணம் திரைத்துறையினரை தாண்டியும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் சேதுவுக்கு திருமணமாகி இன்னும் 4 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் அவரது மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சேதுவுக்கு உமையாள் என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
உடைந்து போன சந்தானம்
சேதுவின் அகால மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பலரும் இன்னும் மீளவில்லை. எம்ஆர்சி நகரில் உள்ள சேதுவின் வீட்டிலேயே அவருக்கு நேற்று இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அவரது நெருங்கிய நண்பரான சந்தானம், சேதுவின் மரணத்தால் மிகவும் உடைந்து போயுள்ளார்.
பெசன்ட் நகரில்
சேதுவின் மரணத்தை அறிந்து அவரது வீட்டிற்கு சென்ற அவர், அவரது உடல் தகனம் செய்யப்படும் வரை உடனிருந்தார். சேதுவின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் சேதுவின் இறுதி ஊர்வலத்தில் அதிகம் பேர் பங்கேற்கவில்லை.
உதயநிதி இரங்கல்
இறுதியாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்குள் தனது நண்பனான சேதுவின் உடலை கண்ணீருடன் சுமந்து சென்றார். இந்நிலையில் நடிகர் சேதுவின் மரணம் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
|
பேரதிர்ச்சி
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சேதுராமன்.. நல்ல மனிதர், நல்ல நண்பர், சிறந்த மருத்துவர், திரைப்பட நடிகர். அவரின் அகால மரணம் என்னைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேதுவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், அவரின் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.