Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மீண்டும் நடிப்பீங்களா? முதல்வரிடம் நிவாரண நிதியை அளித்த கையோடு ஹேப்பி நியூஸ் சொன்ன 'வைகை புயல்'!
சென்னை: நடிகர் வடிவேலு முதல்வர் கொரோனா நிதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர்.
உச்ச நட்சத்திரங்கள் முதல் கடைக்கோடி கலைஞர்கள் வரை பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகின்றனர்.
டிவிட்டரில் இணைந்த வடிவேலு.. போட்டோவுடன் போட்ட பதிவு.. இதாவது ஒரிஜினலா?
ஸ்டாலினுக்கு புகழாரம்
அந்த வகையில் நடிகர் வடிவேலு முதல்வர் ஸ்டாலினை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலினுக்கு புகழராம் சூட்டினார்.
உலகமே உற்று நோக்கும்
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பெயர் வாங்கி தரும் அளவுக்கு ஸ்டாலின் ஆட்சி நடத்துவார் என்றார். உலகமே உற்று நோக்கும் நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தியுள்ளார் முக ஸ்டாலின் என்றும் பாராட்டினார் வடிவேலு.
தலை சுத்துது..
மேலும் தமிழ்நாட்டை பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வடிவேலு நல்லா இருக்குற தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள். நாடு நாடு என பிரித்தால் என்னாவது. நான் அரசியல் பேசவில்லை. இதையெல்லாம் கேட்கும் போது தலைசுத்துது என்றார்.
நல்லதே நடக்கும்
தனது படத்தின் காமெடி காட்சியை சுட்டிக்காட்டி அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, நல்லதே நடக்கும் என கூறியுள்ளார்.
வாய்ப்பு இல்லாமல்
24ஆம் புலிகேசி படத்தில் ஒப்பந்தப்படி நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலு படங்களில் நடிக்க தடை வாங்கினார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் வடிவேலு.
Recommended Video
ரசிகர்கள் மகிழ்ச்சி
தான் 10 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருப்பது வேதனை என்றும் பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்டார். இந்நிலையில் மீண்டும் 24 ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. தற்போது நல்லதே நடக்கும் என வடிவேலு கூறியிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.