Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ஏற்கனவே எங்க வழக்கு நீதிமன்றத்துல இருக்கு..' மனோபாலா மீது பிரபல நடிகர் வடிவேலு பரபரப்பு புகார்!
சென்னை: நடிகர் மனோபாலா மீது பிரபல காமெடி நடிகர் வடிவேலு அதிரடி புகார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல காமெடி நடிகர் வடிவேலு, சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க இருந்தார்.
இதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு, தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
லாக்டவுனில் தன் சகோதரிக்காக தனி விமானம் ஏற்பாடு செய்தாரா? பிரபல ஹீரோ அதிர்ச்சி..திடீர் எச்சரிக்கை!
தலைவன் இருக்கிறான்
இதையடுத்து கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் நடிகர் வடிவேலு கடைசியாக, விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். அடுத்து கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது மதுரையில் இருக்கும் நடிகர் வடிவேலு கொரோனா விழிப்புணர்வு வீடியோவை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.
வேஸ்ட் பேப்பர்
இந்நிலையில் நடிகர் மனோபாலா மீது நடிகர் வடிவேலு பரபரப்பு புகார் அளித்துள்ளார். மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இதில் நடிகர், நடிகைகளின் பேட்டியை எடுத்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்திருந்தார். அதில் சிங்கமுத்து வடிவேலு பற்றி தவறானச் செய்திகளை கூறியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சங்கத்தில்
இதையடுத்து அவர் நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது: நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறேன். நடிகர் சங்கத்துக்காக என்னால் முடிந்த சில உதவிகளை செய்து வருகிறேன்.
சிங்கமுத்து
நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட்பேப்பர் என்ற யூடியூப் சேனலில், நடிகர் சிங்கமுத்துவிடம் என்னைப் பற்றி சில கேள்விகளை கேட்க, அதற்கு அவர், என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறானச் செய்திகளையும் பொய் பிரசாரம் செய்தும் பதிலளித்துள்ளார். அந்த வீடியோவை, தென்னிந்திய நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலும் வெளியிட்டுள்ளார்.
தகுந்த நடவடிக்கை
இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். ஏற்கெனவே எனக்கும் சிங்கமுத்துவுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் நடிகர் மனோபாலா மீதும் சிங்கமுத்து மீதும் நடிகர் சங்கத்தின் சட்ட விதி எண் 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.